திருவள்ளுவர் தினம், வள்ளலார் நினைவு தினம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி, ஜன. 16, 21, 26 ஆகிய தேதிகளில் அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவுறுத்தலை அனைத்து வகையான மதுபானக் கடைகளும், மதுக்கூடங்களும் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் எனவும், அறிவுறுத்தலை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது மதுபான சட்ட விதிமுறைகள்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில்
தெரிவித்துள்ளார்.