மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 13) காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடுகிறார்.
எனது வாக்குச்சாவடி வலிமையான வாக்குச்சாவடி என்ற நிகழ்சியின் மூலம் பிரதமர் மோடி நாடு முழுவதும் பாஜக நிர்வாகிகளுடன் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடி வருகிறார். அதன்படி, தமிழக பாஜக பொறுப்பாளர் கருப்பு. முருகானந்தம், தஞ்சை கோட்ட பொறுப்பாளர் தங்க. வரதராஜன், மாவட்டத் தலைவர் வெங்கடேசன், நாடாளுமன்றத் தொகுதி இணைப் பொறுப்பாளர் அகோரம், உயர்நீதிமன்ற வழக்குரைஞர் கே. ராஜேந்தின், சட்டப் பேரவைப் பொறுப்பாளர் நாஞ்சில் பாலு, நகர தலைவர் மோடி கண்ணன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடவுள்ளார்.