திருவள்ளுவர் தின விழா

சீர்காழியில் புதன்கிழமை திருக்குறள் பண்பாட்டுப் பேரவை சார்பில் திருவள்ளுவர் நாள் விழா கொண்டாடப்பட்டது. 

சீர்காழியில் புதன்கிழமை திருக்குறள் பண்பாட்டுப் பேரவை சார்பில் திருவள்ளுவர் நாள் விழா கொண்டாடப்பட்டது. 
கவிஞர் மு. வெங்கடேசபாரதி தலைமையில் நடைபெற்ற விழாவில், பேரவை முன்னாள் தலைவர்  கோ. வெங்கடேசன், முன்னாள் செயலர் கு. ராசாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொருளாளர் மு. முத்துக்கருப்பன், ஓய்வுப்பெற்ற பேராசிரியர் சு. வீனிநாதன், சா. காமராஜ், கவிஞர். நீலமேகம், அரிமா சங்கத் தலைவர் ஹலிகுல்ஜமால், கவிஞர். பரமசிவம், ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத் தலைவர் ரா. கல்யாணசுந்தரம் ஆகியோர் திருக்குறள் சிந்தனைகள் குறித்து பேசினார். முன்னதாக, நகராட்சி மகாத்மாகாந்தி  பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. தலைவர் வே. சக்கரபாணி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். செயலர் சிவ. அன்பழகன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com