சீர்காழி அருகே கடலில் மீன்பிடிக்கும்போது தவறிவிழுந்த மீனவர் உயிரிழந்தார்.
நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் மு. கோவிந்தராஜ்(63). இவர், சீர்காழி அருகே உள்ள பழையாறு கடல் பகுதியில் இரண்டு கடல் மைல் தொலைவில் வெள்ளிக்கிழமை படகில் மீன்பிடித்துக்கொண்டிருந்தாராம். அப்போது, எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்து, இறந்ததாக உடன் சென்ற மீனவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து, புதுப்பட்டினம் போலீஸார் மற்றும் கடலோரக் காவல் படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.