கல்லூரியில் பயிற்சிப் பட்டறை

கீழ்வேளூர் பிரைம் ஆர்க்கிடெக்சர் மற்றும் பிளானிங் கல்லூரியில் பிம் (பிஐஎம்) பயிற்சி பட்டறை வியாழக்கிழமை நடைபெற்றது.

கீழ்வேளூர் பிரைம் ஆர்க்கிடெக்சர் மற்றும் பிளானிங் கல்லூரியில் பிம் (பிஐஎம்) பயிற்சி பட்டறை வியாழக்கிழமை நடைபெற்றது.
சென்னை கேட் சென்டர் மற்றும் பிரைம் கல்லூரி இணைந்து இந்தப் பயிற்சி பட்டறையை நடத்தின. மேலும்,  3டிஎஸ் மேக்ஸ், ரெவிட் ஆர்க்கிடெக்சர் மென்பொருள் குறித்த பயிற்சி வகுப்புகளும் நடைபெற்றன. 40-க்கும் அதிகமான மாணவர்கள் பயிற்சி பெற்றனர்.  பிரைம் கல்லூரி தாளாளர் என். கோவிந்தராஜ், இயக்குநர் ஆர். பால்ராஜ், கேட் சென்டர் தொழில்நுட்ப ஆசிரியர் மகேஸ்வரன் ஆகியோர் பயிற்சி பெற்ற மாணவர்களை வாழ்த்திப் பேசினர். விரிவுரையாளர்கள் ஏ. பாலாஜி, புவனேஸ்வரி ஆகியோர் பயிற்சிக்கான 
ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com