மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் குதம்பைச் சித்தருக்கு, ஆனி மாத விசாக நட்சத்திர வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, குதம்பைச் சித்தருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் அன்னம்பாலிப்பு நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராம.சேயோன் செய்திருந்தார். இதில் கோயில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணைக் கண்காணிப்பாளர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வழிபட்டனர்.