நாகப்பட்டினம்
விதை சட்டம் குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி
வேதாரண்யத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் "விதை சட்டமும், அதன்
வேதாரண்யத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் "விதை சட்டமும், அதன் நடைமுறைகளும்' எனும் தலைப்பில் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யம் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமுக்கு வேளாண் உதவி இயக்குநர் நா. ஜோதிபாசு தலைமை வகித்தார்.
விதை சான்று மற்றும் அங்ககச் சான்றுத்துறை, விதைச் சான்று அலுவலர் எழில்ராஜன், உதவி விதை அலுவலர் எஸ். வேதரெத்தினம், உதவி வேளாண் அலுவலர்கள் ப. ஆறுமுகம், நா. கார்த்திகேசன், ம. சிவானந்தம், சு. அனீஸ்சு, அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் அருள்பிரகாசம், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மா. மோகன், சுதந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.