கடந்த 3 மாதங்களில் கருவூல அலுவலக நேர்காணலில் பங்கேற்காத ஓய்வூதியதாரர்கள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் கருவூல அலுவலகங்களில் நேரில் ஆஜராகி பதிவு பெற வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : நாகை மாவட்ட கருவூல அலுவலகம் மற்றும் அனைத்து சார்நிலை கருவூல அலுவலகங்களில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களில், நிகழாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் நேர்காணலில் பங்கேற்காதவர்கள், ஜூலை 31-ஆம் தேதிக்குள் தொடர்புடைய கருவூல அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும். நேரில் ஆஜராகாத ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் ஆகஸ்ட் மாதம் முதல் நிறுத்தப்படும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.