சீர்காழி அருகே புத்தூர் பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் லட்சுமி தலைமை வகித்தார். இளைஞர்கள் மேம்பாட்டு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நாராயணசாமி வரவேற்றார். தொழில் முனைவோர் மேம்பாட்டுக்கான புத்தாக்க நிறுவனத்தின் பயிற்சி மற்றும் ஒருங்கிணைப்பாளர் சிவநேசன் அறிமுக உரையாற்றினார். தஞ்சாவூர் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சியாளார் கலைவாணன் கலந்து கொண்டு தொழில் தொடங்கும் விதிமுறைகள், வங்கிக் கடன்பெறும் வழிமுறைகள் மற்றும் தொழிலில் வெற்றி பெறும் திறமை குறித்து விளக்கினார். முகாமில் பங்கேற்ற மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 100 பேருக்கு பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.