அடையாளம் தெரியாத பெண் சடலம்
By DIN | Published On : 30th July 2019 06:54 AM | Last Updated : 30th July 2019 06:54 AM | அ+அ அ- |

நாகூர் அருகே அடையாளம் தெரியாத பெண் ஒருவர் இறந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.
நாகூர், பட்டினச்சேரி கடற்கரையில் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக கடலோர காவல் படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் அங்கு சென்று இறந்து கிடந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலத்தை மீட்டு, நாகை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து
வருகின்றனர்.