நாகப்பட்டினம், ஜூன் 13 : நாகை துணை மின் நிலையப் பராமரிப்புப் பணிகளையொட்டி, நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளுக்கு சனிக்கிழமை (ஜூன் 15) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாகை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வைர. அண்ணாதுரை வெளியிட்ட செய்திக் குறிப்பு : நாகை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதையொட்டி, நாகை, நாகை நகரம், திருமருகல், வேளாங்கண்ணி, வேட்டைக்காரனிருப்பு துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில், சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
துணை மின் நிலையம் வாரியாக மின் விநியோகம் தடைபடும்
பகுதிகள் :
நாகப்பட்டினம்: நாகை, வேளாங்கண்ணி, நாகூர், வெளிப்பாளையம், திட்டச்சேரி, ஓ.என்.ஜி.சி, மஞ்சக்கொல்லை, பரவை, பொய்கைநல்லூர், சிக்கல், தோணித்துறை.
நாகை நகரம்: ஓ.என்.ஜி.சி, மாவட்ட ஆட்சியரகம், அரசு மருத்துவமனை, நாகூர் தர்கா பகுதி.
வேளாங்கண்ணி: வேளாங்கண்ணி நகரம், செருதூர், பரவை.
திருமருகல் : திருமருகல், மருங்கூர், எரவாஞ்சேரி, திருப்புகலூர், சீயாத்தமங்கை, போலகம், திருக்கண்ணபுரம்.
வேட்டைக்காரனிருப்பு:
திருப்பூண்டி, புதுப்பள்ளி, காமேஸ்வரம், விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு, கோவில்பத்து, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, தாமரைப்புலம்.