திருவெண்காடு அருகே தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு தி.மு.க. ஞாயிற்றுக்கிழமை நிவாரண உதவி
அளிக்கப்பட்டது.
திருவெண்காடு அருகே மங்கைமடம் குளத்திருப்பு தெருவைச் சேர்ந்தவர் ஆச்சியம்மாள், அவரது மகன் பாஸ்கரன் ஆகியோரது குடிசை வீடுகளில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நிவேதாமுருகன், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து தலா ரூ. 2 ஆயிரம், அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், சீர்காழி கிழக்கு ஒன்றியச் செயலாளர் சசிக்குமார், முன்னாள் ஒன்றியச் செயலாளர் வீரமணி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.