திருவாரூர் சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் ஆர். ஜீவானந்தம்

திருவாரூர்  சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளராக ஆர். ஜீவானந்தம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

திருவாரூர்  சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளராக ஆர். ஜீவானந்தம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
நாகை மாவட்டம், வடக்குப் பொய்கைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆர். ஜீவானந்தம் (69). பி. ஏ. பட்டதாரி. தந்தை பெயர் ராமசாமி. 2001-இல் நாகை சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தமிழக வேளாண்துறை அமைச்சராகப் பதவி
வகித்துள்ளார்.
அதிமுக நாகை மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தார். தற்போது அதிமுக நாகை மாவட்ட அவைத் தலைவராக உள்ளார். இவருக்கு கார்த்திகேயன், ரமேஷ், காளிதாஸ், ராஜராஜன் ஆகிய 4 மகன்கள் உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com