திருமருகல் மகா மாரியம்மன், பூர்ண புஷ்கலா அம்பிகை சமேத அய்யனார், விநாயகர், பிடாரி அம்மன் கோயில்களில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 24) நடைபெறுகிறது.
இக்கோயில்களில் நடைபெற்றுவந்த திருப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, குடமுழுக்கு விழாவுக்காக மார்ச் 22-ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமங்களுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.
தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றதும், 7.30 மணியளவில் குடமுழுக்கு செய்விக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், கிராம மக்கள் செய்துள்ளனர்.