மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் நாகை சட்டப் பேரவைத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நாகையில் புதன்கிழமை நடைபெற்றது.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் நாகை சட்டப் பேரவைத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நாகையில் புதன்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்ட திமுக பொறுப்பாளர் என். கெளதமன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் அ. சீனிவாசன், முன்னாள் அமைச்சர் உ. மதிவாணன் எம்.எல்.ஏ, காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் ஜி.கே. கனகராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் நாகை மாலி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம். செல்வராசுவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய, கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் முழு வீச்சில் பணியாற்ற, கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்தனர். நிறைவில், வேட்பாளர் எம். செல்வராசு, கூட்டணிக் கட்சி செயல்வீரர்களின் ஆதரவைக் கோரி பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com