மயிலாடுதுறை அருகே சிறுமியை தரக்குறைவாக பேசியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பட்டவர்த்தி கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம் அதே பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் (31), சக்திவேல் (20), சரவணன் (23) ஆகியோர் தரக்குறைவாகவும், காமகுரோதமாகவும் பேசியுள்ளனர். இதுகுறித்து அச்சிறுமியின் தந்தை மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸில் அளித்த புகாரின்பேரில், மேற்கண்ட மூவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.