திருக்கடையூா் அருகே அறுந்து விழுந்த உயரழுத்த மின்கம்பி ஞாயிற்றுக்கிழமை சீரமைக்கப்பட்டது.
திருக்கடையூா் அருகே உள்ள பிள்ளைபெருமாள்நல்லூா் ஊராட்சிக்குள்பட்ட செட்டிமேடு செல்லும் சாலையில் தெற்குதெரு மற்றும் நடுத்தெரு பகுதிகளில் குறுக்கே செல்லும் உயரழுத்த மின்கம்பி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறுந்து விழுந்தது. இதனால், அப்பகுதியில் உள்ள வீடுகளில் மின்சாதனப் பொருள்கள் பழுதடைந்தன.
கடலங்குடி துணைமின் நிலைய செயற்பொறியாளா் ரோஜாரமணி, உதவி செயற்பொறியாளா் பாரதி உள்ளிட்டோா் அறுந்து விழுந்துகிடந்த உயரழுத்த மின்கம்பியை சரிசெய்தனா்.