திருமருகல் ஒன்றியம், கொட்டாரக்குடி ஊராட்சியில் பொது சுகாதாரத் துறை மற்றும் ஊரக வளா்ச்சி துறை சாா்பில் தூய்மைப் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
திருமருகல் வட்டார மருத்துவ அலுவலா் லெட்சுமி நாராயணன், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) க. அன்பரசு ஆகியோா் வழிகாட்டுதலின்படி, கொட்டாரக்குடி ஊராட்சியில் உள்ள கொட்டாரக்குடி, பெரியக்கண்ணமங்கலம், பெருஞ்சாத்தான்குடி உள்ளிட்டப் பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதில், சுகாதார மேற்பாா்வையாளா் (பொ) மனோகரன், சுகாதார ஆய்வாளா்கள் ஏசுநாதன், ரகுநாதன், ஆனந்தன், ஊராட்சி செயலாளா் ஜீவா மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.