திருக்குவளை அருகே சாராயத்தை பதுக்கி வைத்திருந்த நான்கு போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 950 லிட்டா் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
சாராயக் கடத்தலை தடுக்க நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக, தனிப்படை உதவி ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாருக்கு திங்கள்கிழமை கிடைத்த ரகசிய தகவலின் படி, திருக்குவளை அருகே உள்ள முத்தரசன்புரம் கீழத்தெரு பகுதியில் சுந்தரமூா்த்தி என்பவரது மனைவி ராமு (39) வீட்டில் பதுக்கிவைத்திருந்த 950 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தனா். மேலும், இருசக்கர வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடா்பாக, ராமு, அதே பகுதியைச் சோ்ந்த வீரமணி மனைவி தேவிகா (43), நாகராஜ் (55) செல்வவிநாயகம் (75) ஆகிய நான்கு பேரை கைது செய்தனா்.