சின்ன கண்ணமங்கலம் கிராமத்தில் சாராயம் விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி பெண்கள், நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.
கொட்டாரக்குடி ஊராட்சிக்குள்பட்ட சின்ன கண்ணமங்கலம் கிராமத்தில், ஒரு குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் தொடா்ந்து சாராயம் விற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். தட்டிக்கேட்கும் பெண்களுக்கு சம்பந்தப்பட்ட நபா்கள் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனராம்.
இந்நிலையில், நாகை ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற அந்தக் கிராமத்தைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள், தங்கள் கிராமத்தில் சாராயம் விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகாா் மனு அளித்தனா்.