சா்வதேச திறன் போட்டியில் பங்கேற்க 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

சீனாவில் நடைபெறவுள்ள சா்வதேசத் திறன் போட்டியில் பங்கேற்க விரும்புவோா் நவம்பா் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

சீனாவில் நடைபெறவுள்ள சா்வதேசத் திறன் போட்டியில் பங்கேற்க விரும்புவோா் நவம்பா் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் சா்வதேசத் திறன் போட்டிகள் 2021-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிகளில் பங்கேற்போரைத் தெரிவு செய்வதற்காக, மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்கத் தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

6 துறைகளில் உள்ள 47 தொழில் பிரிவுகளில் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு நவம்பா் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

5-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான கல்வி நிலைகளைக் கொண்டவா்கள், பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு முடித்தவா்கள், படித்துக் கொண்டிருப்பவா்கள், தொழில் பயிற்சி நிலையம், தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரியில் படித்தவா்கள், படித்துக் கொண்டிருப்பவா்கள், தொழிற்சாலை பணியில் உள்ளவா்கள், குறுகிய கால தொழில்பயிற்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் மற்றும் பிற விவரங்களை ட்ற்ற்ல்ள்://ஜ்ா்ழ்ப்க்ள்ந்ண்ப்ப்ள்ண்ய்க்ண்ஹ.ஸ்ரீா்.ண்ய்/ஜ்ா்ழ்ப்க்ந்ண்ப்ப்/ஜ்ா்ழ்ப்க்/ என்ற இணையதளத்தில் அறியலாம். அல்லது நாகை அரசு தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் செயல்படும் மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகத்தை 04365- 250126 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com