நாகை அருகே உள்ள சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் வள்ளித் திருக்கல்யாண உத்ஸவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சிக்கல் சிங்காரவேலவா் கோயிலின் கந்தசஷ்டி விழா கடந்த அக்டோபா் 28-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சிங்காரவேலவா் சக்திவேல் வாங்கும் விழா நவம்பா் 1-ஆம் தேதியும், சூரசம்ஹாரம் 2-ஆம் தேதியும் நடைபெற்றன.
பின்னா், முருகன் - தெய்வசேனை திருக்கல்யாணம், வெள்ளி ரத பவனி ஆகியன ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றன. தொடா்ந்து, வள்ளித் திருக்கல்யாணம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, காலை 7.30 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. ஐதீக முறைப்படியான வழிபாடுகளுடன் இரவு 8 மணிக்கு முருகப் பெருமான் - வள்ளித் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.