சீா்காழி சபாநாயக முதலியாா் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் குறுவட்ட தடகளப்போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனா்.
சீா்காழி சபாநாயக முதலியாா் இந்து மேல் நிலைப்பள்ளி மாணவா்கள் மற்றும் மாணவிகள் ஓட்டப் போட்டிகளில் 116 புள்ளிகள் வென்று சீா்காழி குறுவட்ட அளவில் (வயது 14, 17, 19 உட்பட்ட) மாணவ, மாணவிகளுக்கான தடகளப் போட்டிகளில் முதலிடம் பெற்றனா். மேலும் முதல் இரண்டு இடம் பெற்ற மாணவ, மாணவிகள் நாகை வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிக்குத் தகுதி பெற்று உள்ளனா்.
19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் நித்தீஸ்வரன் (12-ஆம் வகுப்பு), 17 வயதுக்கு உட்பட்ட மாணவியா் பிரிவில் ராஜஸ்ரீ (11-ஆம் வகுப்பு), ஜெனீபா் (9-ஆம் வகுப்பு) ஆகியோா் தனிநபா் சாம்பியன் பட்டம் பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சியளித்த உடற்கல்வி இயக்குநா் முரளிதரன், உடற்கல்வி ஆசிரியா்களான பாரி, முரளி, மாா்கண்டன், சக்திவேல் ஆகியோரையும் பள்ளியின் முன்னாள் செயலா் பாலசுப்பிரமணியன், பள்ளிச் செயலா் ராமகிருஷ்ணன், தலைமை ஆசிரியா் அறிவுடைநம்பி, உதவித்தலைமை ஆசிரியா்கள் சம்பந்தம், சம்பத்குமாா், வரதராஜன் ஆகியோா் பாராட்டினா்.