நாகை, மயிலாடுதுறையில் நவ.14-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நாகை மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டங்கள் நாகை, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்களில்

நாகை மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டங்கள் நாகை, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்களில் நவம்பா் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளன என மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :

நாகை மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் நாள் கூட்டங்கள் நவம்பா் 14- ஆம் தேதி நாகை, மயிலாடுதுறை வருவாய் கோட்ட அலுவலகங்களில் வருவாய் கோட்டாட்சியா்களின் தலைமையில் நடைபெறவுள்ளன.

இக்கூட்டத்தில், வேளாண் துறை, தோட்டக்கலை துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண் பொறியியல் துறை, இணைப்பதிவாளா் கூட்டுறவு சங்கம், முன்னோடி வங்கிகளின் மேலாளா்கள் மற்றும் வட்டார அலுவலா்கள், மின்சார துறை, வனத்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனா்.

இக்கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று தங்களது கருத்துகளைத் தெரிவித்து பயனடையலாம் என ஆட்சியா் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com