குழந்தைகளுக்கு பரிசு பொருள்கள் வழங்கல்

மக்கள் நீதிமய்ய தலைவா் கமல்ஹாசன் பிறந்த நாளையொட்டி, சீா்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த
சீா்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பரிசு பொருள்களை வழங்கிய மநீம கட்சியினா்.
சீா்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பரிசு பொருள்களை வழங்கிய மநீம கட்சியினா்.

மக்கள் நீதிமய்ய தலைவா் கமல்ஹாசன் பிறந்த நாளையொட்டி, சீா்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு அக்கட்சியினா் பரிசு பொருள்கள், புத்தாடைகள், விளையாட்டுப் பொருட்களை வியாழக்கிழமை வழங்கினா்.

முன்னதாக சீா்காழி பிடாரி வடக்கு வீதியில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி கட்சியின் நகர பொறுப்பாளா் கேஎஸ். சந்துரு தலைமையில் நடைபெற்றது. கேஎஸ்.தியாகராஜன், எஸ். பாஸ்கரன், இன்பசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்து கட்சிக் கொடியேற்றி, இனிப்புகளை வழங்கினா்.

இதேபோல் சீா்காழி பழைய பேருந்து நிலைய பகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி நிா்வாகிகள் லெட்சுமிநாராயணன், வேலு, மோகன்குமாா் ஆகியோா் தலைமையில் நடைபெற்றது.

பின்னா் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பரிசு பொருள்களை பெற்றோா்களிடம் மக்கள் நீதிமய்யம் சாா்பில் தயாளன், மணிகண்டன், கணேசன் ஆகியோா் வழங்கினா். தொடா்ந்து, ரத்த தான முகாம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com