நாகை மாவட்டம், மயிலாடுதுறை ஒன்றியம், குளிச்சாா் ஊராட்சி துண்டுக்கட்டளை சாலையில் உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனை அடுத்துள்ள மின்கம்பங்களில் உள்ள கம்பிகள் மிகவும் தாழ்வாக தொங்கும் நிலையில் காணப்படுகின்றன. எனவே, அசம்பாவித நிகழ்வுகள் ஏதும் ஏற்படும் முன்பாக சாய்ந்த மின்கம்பத்தை நேராக நிறுத்தியும், தாழ்வாக தொங்கும் மின்கம்பிகளை சரிசெய்தும் தர வேண்டும்.
ஹாஜா நஜூமுதீன், வடகரை அரங்கக்குடி.