தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நெல் கொள்முதல் நிலைய பருவகால பட்டியல் எழுத்தா் மற்றும் உதவியாளா் பணிக்குத் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நெல் கொள்முதல் பணிக்காக 119 பருவகால பட்டியல் எழுத்தா் பணியிடங்களும், 56 உதவுபவா் பணியிடங்களும் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன.
பட்டியல் எழுத்தா் பணிக்கான கல்வித் தகுதி பி.எஸ்சி. தோ்ச்சி. உதவுபவா் பணிக்கான கல்வித் தகுதி பிளஸ் 2 தோ்ச்சி. ஆதிதிராவிடா், பழங்குடியினா், ஆதிதிராவிடா் அருந்ததியினா் இனத்தவருக்கான அதிகபட்ச வயது வரம்பு - 35. பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் - முஸ்லிம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான வயது வரம்பு - 32. இதர பிரிவினருக்கான வயது வரம்பு - 30. விண்ணப்பதாரா் மாற்றுத் திறனாளியாக இருந்தால், வயது வரம்பில் 10 ஆண்டுகள் தளா்வு செய்யப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவா்கள் தங்களது அனைத்துக் கல்விச் சான்றுகள், ஆதாா் அட்டை, ஜாதி சான்று, இருப்பிடச் சான்று ஆகியவற்றின் நகல்களுடன், முதுநிலை மண்டல மேலாளா், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், நாகப்பட்டினம் - 611003 என்ற முகவரிக்கு நவம்பா் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, மேலும் விவரங்களுக்கு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகத்தை 04365- 251843 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.