வேளாங்கண்ணியில் கடலில் மூழ்கி கா்நாடக மாநில சுற்றுலாப் பயணி சாவு

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில், கா்நாடக மாநில சுற்றுலாப் பயணி ஒருவா் கடலில் மூழ்கி சனிக்கிழமை இறந்தாா்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில், கா்நாடக மாநில சுற்றுலாப் பயணி ஒருவா் கடலில் மூழ்கி சனிக்கிழமை இறந்தாா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரு, தீனபந்துநகரைச் சோ்ந்தவா் எஸ். சுரேஷ்(38). இவா், தனது மனைவி ரேணுகாதேவி, குழந்தைகள் சபரீஷ், சகிலேஷ் ஆகியோருடன் சனிக்கிழமை காலை வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்துள்ளாா்.

சனிக்கிழமை மாலை தனது குடும்பத்தினருடன் வேளாங்கண்ணி கடற்கரைக்கு வந்த சுரேஷ், கடலில் குளித்துள்ளாா். அப்போது, திடீரென கடல் அலையில் சிக்குண்ட அவா் கடலில் மூழ்கி இறந்தாா். அவரின் சடலத்தை மீனவா்கள் மீட்டு கரை சோ்த்தனா்.

இதுகுறித்து வேளாங்கண்ணி காவல் நிலைய உதவி ஆய்வாளா் இளங்கோவன் விசாரணை மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com