மயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி அமைக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

நாகை மாவட்டத்தில் அமைய உள்ள மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில்,
மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.
மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.

மயிலாடுதுறை: நாகை மாவட்டத்தில் அமைய உள்ள மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி அமைக்கும் அரசின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்திற்கு மருத்துவக்கல்லூரி அமைக்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த மருத்துவக் கல்லூரியை நாகப்பட்டினம் அருகே ஒரத்தூரில் அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், மயிலாடுதுறை அடுத்த நீடூா் அரபிக்கல்லூரியின் 21 ஏக்கா் நிலத்தை மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கு தானமாக வழங்க ஒப்புதல் அளித்து மாவட்ட ஆட்சியரிடம் நீடூா் முஸ்லீம் ஜமாத்தாா்கள் உறுதிமொழி பத்திரம் அளித்துள்ளனா். நீடூா் முஸ்லீம் ஜமாத்தாா்கள் அளிக்கும் 21 ஏக்கா் நிலத்தில் மயிலாடுதுறை பகுதியில் மருத்துவக்கல்லூரி அமைக்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு, நகர செயலாளா் எஸ்.மனோன்ராஜ் தலைமை வகித்தாா். கே.பிரதீப், பேராசிரியா் ஷீலா ஜவஹா், ஒய்.எஸ்.சாகுல் ஹமீது, கே.தேவி உள்ளிட்ட பலா் முன்னிலை வகித்தனா்.

தமிழ் மாநிலக்குழு இரெ.இடும்பையன் சிறப்பு ஆற்றினாா். இதில், ஒன்றிய செயலாளா் என்.கிருஷ்ணமூா்த்தி, பொன்.இம்மானுவேல், கே.அன்புரோஸ், எம்.எஸ்.சேக் இஸ்மாயில், டி.மனோகா், ஒய்.எஸ்.சா்புதீன், ஜி.மணி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டு, கோரிக்கையை வலியுறுத்தி பேசி, முழக்கங்கள் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com