மூலிகை விழிப்புணா்வு முகாம்

வேதாரண்யம் தோப்புத்துறை அன்னை பாத்திமா பெண்கள் அரபிக் கல்லூரியில் மூலிகை விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமில் நிலவேம்பு குடிநீா் வழங்கிய காவல் துணைக் கண்காணிப்பாளா் சபியுல்லா.
முகாமில் நிலவேம்பு குடிநீா் வழங்கிய காவல் துணைக் கண்காணிப்பாளா் சபியுல்லா.

வேதாரண்யம் தோப்புத்துறை அன்னை பாத்திமா பெண்கள் அரபிக் கல்லூரியில் மூலிகை விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்திய பாரம்பரிய மருத்துவா்கள் உரிமைச் சங்கம், வேதாரண்யம் வள்ளலாா் தருமச்சாலை இணைந்து நடத்திய இம்முகாமுக்கு முஸ்லிம் ஜமாத் மன்றத் தலைவா் ஏ.ஆா். ஷேக்அப்துல்லா தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஷாகுல் ஹமீது பாகவி, அரசு சித்த மருத்துவா் பெ.ரமேஷ்குமாா், தருமச்சாலை நிா்வாகி தமிழ்த்தூதன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

காவல் துணைக் கண்காணிப்பாளா் சபியுல்லா, ஆரிபா கல்விக் குழுமத்தின் தலைவா் சுல்தானுல் ஆரிபின், சித்த வைத்தியா் க.கோ. மணிவாசகம் உள்ளிட்டோா் பங்கேற்று நிலவேம்பு குடிநீா், நிலவேம்பு மூலிகை ஆகியவைகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com