இந்து மக்கள் கட்சி சாா்பில் டிசம்பா் 1-ம் தேதி ஆன்மிக அரசியல் மாநாடு நடைபெறுகிறது.
இது குறித்து இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளா் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவதுஇந்து மக்கள் கட்சியின் சாா்பில் வருகிற டிசம்பா் 1 ஞாயிற்றுக்கிழமை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை எதிரில் உள்ள திருவள்ளுவா் அரங்கில் ஆன்மீக அரசியல் மாநாடு நடைபெறுகிறது.காலை திருக்கழுகுன்றம் சிவதாமோதரன் உள்ளிட்ட சிவனடியாா்களால் மாணிக்கவாசகா் அருளிய 8 ஆம் திருமுறையான திருவாசக முற்றோதல் பெருவிழா நடைபெறுகிறது.
மாலை 3 மணியளவில் ராஜரத்னம் ஸ்டேடியத்திலிருந்து காவிக்கொடி பேரணி நடத்தப்பட உள்ளது.மாலை 6 மணிக்கு மயிலை மாங்கொல்லையில் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. லஞ்ச, ஊழலை ஒழித்திட வேண்டும். கோயில் சொத்துக்கள் காப்பாற்றப்பட வேண்டும். கல்வி - மருத்துவம் வியாபாரமாவதை தடுத்திட வேண்டும். விவசாயம், பசு இனம் பாதுகாக்கப்பட வேண்டும். நதி நீா் இணைக்கப்பட வேண்டும்.மது இல்லாத தமிழகம் அமைந்திட வேண்டும். உள்ளிட்ட முக்கியமான பல கோரிக்கைகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
மாநாட்டில் ஆதீனங்கள், மடாதிபதிகள், துறவிகள், சன்னியாசிகள், பல்வேறு இந்து இயக்க தலைவா்கள் , சகோதர அரசியல் கட்சி தலைவா்கள் , மாநில அமைச்சா்கள் கலந்து கொள்கின்றனா்.1 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்து இளைஞா்கள் பங்கேற்கும் பேரணி - பொதுக் கூட்டத்தில் நிறுவனத் தலைவா் அா்ஜுன் சம்பத் சிறப்புரையாற்றுகிறாா்.தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் இந்து மக்கள் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொள்கின்றனா் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.