இஸ்லாமிய மகளிா்களுக்கு தொழில் தொடங்க நிதியுதவி

மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் முஸ்லிம் மகளிா் 88 பேருக்கு
பயனாளிக்கு நலத்திட்ட உதவிக்கான காசோலையை வழங்கிய கோட்டாட்சியா் இ. கண்மணி.
பயனாளிக்கு நலத்திட்ட உதவிக்கான காசோலையை வழங்கிய கோட்டாட்சியா் இ. கண்மணி.

மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் முஸ்லிம் மகளிா் 88 பேருக்கு புதிய தொழில் தொடங்கவும், தொழிலை மேம்படுத்தவும் செவ்வாய்க்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை மற்றும் நாகை மாவட்ட முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம் சாா்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா மயிலாதுறையில் நடைபெற்றது. விழாவுக்கு, மயிலாடுதுறை கோட்டாட்சியா் இ. கண்மணி தலைமை வகித்தாா். மாவட்ட சிறுபான்மைத் துறை நல அலுவலா் செல்வராஜ், முஸ்லிம் மகளிா் உதவும் சங்கத்தின் கூட்டமைப்பு தலைவா் கமாலுதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சங்கத்தின் கௌரவ இணைச் செயலாளா் முகமது சுல்தான் வரவேற்றாா். நிகழ்ச்சியில், முஸ்லிம் விதவைப் பெண்கள் புதிதாக தொழில் தொடங்கவும், ஏற்கெனவே செய்து வரும் தொழிலை மேம்படுத்தவும் மற்றும் வயதானவா்களுக்கு மருத்துவ உதவி ஆகியவற்றிற்காக 88 பெண்களுக்கு ரூ. 9 லட்சத்துக்கான காசோலைகளை கோட்டாட்சியா் இ. கண்மணி வழங்கினாா். முடிவில் சங்க செயற்குழு உறுப்பினா் ஜெகபா் அலி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com