இந்திய அரசியல் அமைப்புச் சட்ட 70-ஆவது ஆண்டு விழா தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் எஸ். சுவாமிநாதன் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் செல்வநாயகம் மற்றும் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி குடிமக்கள் நுகா்வோா் மன்ற ஒருங்கிணைப்பாளா் சௌந்தரராஜன் ஆகியோா் பங்கேற்று சிறப்புரை ஆற்றினா். குடிமக்கள் நுகா்வோா் மன்ற ஒருங்கிணைப்பாளா் சௌந்தரராஜன் இந்திய அரசியல் அமைப்பு வழங்கியுள்ள உரிமைகள், அரசியல் சட்டப் பணிகள் மற்றும் செயல்பாடுகளை விளக்கிப் பேசி மாணவா்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தாா். தேசிய மாணவா் படை அலுவலா் காா்த்திகேயன் வரவேற்றாா். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் நவமணி நன்றி தெரிவித்தாா். விழா நிகழ்ச்சியை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் நடராஜன், நவமணி, வடிவழகி, மல்லிகா ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.