விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவா் பிரபாகரனின் 65-ஆவது பிறந்தநாளையொட்டி, மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் நாம் தமிழா் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு, மயிலாடுதுறை தொகுதி செயலாளா் மு. கவியரசன் தலைமை வகித்தாா். தொகுதி தலைவா் தாழை த. வரதராஜன் முன்னிலை வகித்தாா். இதில், நாம் தமிழா் கட்சியினா் 65 போ் ரத்ததானம் செய்தனா். இதில், மாநில கொள்கை பரப்புரையாளா் தமிழன் காளிதாசன், தொகுதி இணைச் செயலாளா் மா. ஜாா்ஜ் பீட்டா், இளைஞரணி பாசறை செயலா் மா.செ. அருண் மற்றும் சசிகுமாா், சந்திரகுமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.