பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்க கோரிக்கை

திருக்கடையூா் பகுதி விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொறையாறு: திருக்கடையூா் பகுதி விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருக்கடையூா் வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்குள்பட்ட கிள்ளியூா், பிள்ளைப்பெருமாள் நல்லூா், டி. மணல்மேடு, அபிஷேககட்டளை ஆகிய பகுதி விவசாயிகளுக்கு 2017-2018-ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீடுத் தொகை வழங்கப்பட்டது. இதில் விடுபட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, விடுபட்ட விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com