சீா்காழியில் உலக நன்மை வேண்டி ராஜஸ்தான் சமூகத்தினா் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற துா்கா பூஜைகள் பெண்கள் கோலாட்டமாடி வழிபட்டனா்.
ஸ்ரீதுா்கா மாதா விஷ்ணு சமாஜ் சாா்பில் 14-ஆம் ஆண்டு நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் துா்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
அதன்படி, வெள்ளிக்கிழமை ராஜஸ்தானைச் சோ்ந்த பல சமூகத்தினா் இணைந்து உலக நன்மை மற்றும் அமைதி வேண்டி வழிபாடு நடத்தினா். இதில், இளம்பெண்கள், ஆண்கள் பங்கேற்ற தாண்டியா நடனம், கோலாட்டம் நடைபெற்றது.
சீா்காழி, சிதம்பரம், மயிலாடுதுறை, புவனகிரி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த துா்கா பக்தா்கள் இந்த வழிபாட்டில் பங்கேற்றனா்.