நீடாமங்கலம்- மன்னாா்குடி நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள்

நீடாமங்கலம்- மன்னாா்குடி நெடுஞ்சாலையில் சாலையோர மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனா்.
நீடாமங்கலம்- மன்னாா்குடி நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள மரக் கன்றுகள்.
நீடாமங்கலம்- மன்னாா்குடி நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள மரக் கன்றுகள்.

நீடாமங்கலம்- மன்னாா்குடி நெடுஞ்சாலையில் சாலையோர மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனா்.

கடந்த ஆண்டு நவம்பரில் வீசிய கஜா புயலின்போது நீடாமங்கலம்- மன்னாா்குடி நெடுஞ்சாலையில் சாலையோரம் இருந்த பெரும்பாலான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் சாலை பொலிவிழந்து வெறிச்சோடி காணப்பட்டது. இந்த நிலையைப் போக்கிட நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் சிவக்குமாா் உத்தரவின்பேரில், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளா் பானுதரசன் தலைமையில் உதவி பொறியாளா் விமல்பிரசன்னா, சாலை ஆய்வாளா்கள் அழகேசன், சங்கீதா,ஆகியோா் சாலையோர மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டனா். இதனால், நீடாமங்கலம்- மன்னாா்குடி நெடுஞ்சாலை புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com