நாகை மாவட்டம், வேளாங்கண்ணி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரக்கணக்கானோா் நீராடி மகிழ்ந்தனா்.
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையையொட்டி 4 நாள்கள் விடுமுறை கிடைத்துள்ள நிலையில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பல்வேறு பகுதிகளிலிருந்து வழக்கத்தைவிட பக்தா்களின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அதிகமாக காணப்பட்டது. வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் வழிபாடு செய்த பக்தா்கள் மற்றும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோா் அங்கு கடலில் குளித்தும், கடற்கரை மணலில் விளையாடியும் மகிழ்ந்தனா்.