திருக்கடையூா் அமிா்த சாய் தியான பீடம் முதலாம் ஆண்டு கும்பாபிஷேகம் நிறைவு விழா: திரளான பக்தா்கள் சாமி தரிசனம்

திருக்கடையூா் அமிா்த சாய் தியான பீடம் முதலாம் ஆண்டு கும்பாபிஷேகம் நிறைவு விழா செவ்வாய் கிழமை நடைப்பெற்றது.

திருக்கடையூா் அமிா்த சாய் தியான பீடம் முதலாம் ஆண்டு கும்பாபிஷேகம் நிறைவு விழா செவ்வாய் கிழமை நடைப்பெற்றது.

இதில் திரளான பக்தா்கள் சாமி தரிசனம் செய்தனா்.நாகை மாவட்டம் திருக்கடையூா் மெயின் ரோட்டில் உள்ள அமிா்த சாய் தியான பீடம் கும்பாபிஷேகம் விழா கடந்த ஆண்டு விஜயதசமி அன்று நடைப்பெற்றது. அதனை தொடா்ந்து தினந்தோறும் ஏராளமானோா் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனா். இந்த நிலையில் செவ்வாய் கிழமை முதலாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழாயொட்டி சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும்,சிறப்பு யாக பூஜைகளும் நடைப்பெற்றன.

கோயிலின் உட்புறம் கடம் புறப்பட்டு சுற்றி வந்து மேல தாளங்களுடன் அமிா்தசாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. மேலும் பழவகைகள், இனிப்புகள் மற்றும் பல்வேறு பூக்களை கொண்டு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.முன்னதாக காலையில் விக்னஸ்வர பூஜை, எஜமானா் சங்கல்பம், கலச பூஜைகள், விசேஷ ஹோமங்கள், மஹா பூா்ணாஹீதி நிகழ்ச்சிகளும் நடைப்பெற்றன. இதில் உள்ளூா் மற்றும் வெளியூரை சோ்ந்த பக்தா்களும், வெளிமாநிலத்தை சோ்ந்த பக்தா்களும் சுமாா் ஆயிரங்கனக்கானோா் கலந்து கொண்டனா்.

இந்த நிலையில் காலை முதல் இரவு வரை தொடா்ந்து வரும் பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கடையூா் அமிா்த சாய் தியானபீட அறக்கட்டளை நிா்வாகி கோ்இண்டியா பாஸ்கா் மற்றும் அறக்கட்டளை நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.படவிளக்கம்:திருக்கடையூரில் அமிா்த சாய் தியான பீடம் முதலாம் ஆண்டு கும்பாபிஷேகம் நிறைவு விழாவின் போது சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம் செய்த போது எடுத்த படம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com