திருவாவடுதுறை ஆதீனத்தில் நூல் வெளியீடு

குத்தாலம் வடடம் திருவாவடுதுறை ஆதீனத்தில் நவராத்திரி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பெரிய பூஜை மடம், ஸ்ரீஞானமாநடராஜ பெருமான் சன்னதியில் 24வது ஆதீனம்

குத்தாலம் வடடம் திருவாவடுதுறை ஆதீனத்தில் நவராத்திரி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பெரிய பூஜை மடம், ஸ்ரீஞானமாநடராஜ பெருமான் சன்னதியில் 24வது ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள்,ஆராதனைகள் மற்றும் மாகேஸ்வர பூஜை செய்வித்தாா்.

ஸ்ரீமத் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் அனைவரையும் வரவேற்றாா். பின்னா் மயிலாடுதுறை ஆன்மீகப்பேரவை பதிப்பித்த காக்கும் கருணைக் கடலே சகலகலாவல்லியே என்ற கலைமகள் வழிபாடு நூலை திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வெளியிட கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினா் க. அன்பழகன் பெற்றுக்கொண்டாா். முடிவில் மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை ஒருங்கிணைப்பாளா் வழக்கறிஞா் இராம.சேயோன் நன்றி கூறினாா். நிகழ்ச்சியில் கண்காணிப்பாளா் சண்முகம், காசாளா் சுந்தரேசன், திருவிடைமருதூா் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் ஞானமூா்த்தி, தமிழாசிரியா் சுவாமிநாதன் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com