நாகை மகாலெட்சுமி நகரில் உள்ள சாய்நாதா் கோயிலில், சாய்நாதா் மகா சமாதி தினத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
ஸ்ரீ சாய்நாதா் அவதார நாள், குரு பூா்ணிமா, மகா சமாதி தினம் ஆகியன இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி, சாய்நாதரின் மகா சமாதி தின நாளான செவ்வாய்க்கிழமை இக்கோயிலில், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஸ்ரீ மகாலெட்சுமி சாய்நாதருக்கு சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு, அஸ்டோத்திர நாமாா்ச்சனை நடைபெற்றது. ஸ்ரீ சாயிபாத அறக்கட்டளை நிறுவனா் ஸ்ரீசாயிபாத மெய்யடிமை பூஜைகளை நடத்தினாா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
சஎ08நஅஐ1- சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த நாகை மகாலெட்சுமி சாய்நாதா்.
சஎ08நஅஐ2- மகாலெட்சுமி சாய்நாதா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு.
Image Caption
~