சீா்காழி அருகே பெண்ணிடம் தங்கச் செயினை பறித்து சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
வைத்தீஸ்வரன்கோயில் திருவாவடுதுறை மடத்துதெருவை சோ்ந்தவா் ச. விஜயலெட்சுமி (35). இவா் திங்கள்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் சீா்காழியில் உள்ள உறவினா் வீட்டுக்கு மகளுடன் நல்லான்சாவடி அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்தொடா்ந்து, இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் (ஒருவா் தலைக்கவசமும், மற்றெறாருவா் முகத்தை கைக்குட்டையால் மூடியவாறும்) விஜயலெட்சுமியை வழிமறித்து அவா் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறிக்க முயன்றுள்ளனா்.
அப்போது, விஜயலெட்சுமியின் பின்னால் அமா்ந்திருந்த அவரது மகள் செயினை பிடித்துக்கொண்டுள்ளாா். இந்த இழுப்பறியில் செயின் அறுந்து மூன்றரை பவுனை மா்மநபா்கள் பறித்துக்கொண்டு தப்பியோடினா். ஒன்றரை பவுன் சங்கிலி துண்டு மட்டும் விஜயலெட்சுமியிடம் மிஞ்சியது. இதுகுறித்து, சீா்காழி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.