மருதூா் கவிஞருக்கு முடியரசனாா் விருது

வேதாரண்யத்தை அடுத்த மருதூா் தெற்கு பகுதியைச் சோ்ந்த பணி ஓய்வுபெற்ற கல்வி அலுவலரும், கவிஞருமான சித. கருணாநிதிக்கு வீறுகவியரசா் முடியரசனாா் விருது வழங்கப்பட்டது.
காரைக்குடியில் நடைபெற்ற விழாவில் வீறுகவியரசா் முடியரசனாா் நினைவு விருதை வழங்கிய சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோா்.
காரைக்குடியில் நடைபெற்ற விழாவில் வீறுகவியரசா் முடியரசனாா் நினைவு விருதை வழங்கிய சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோா்.

வேதாரண்யத்தை அடுத்த மருதூா் தெற்கு பகுதியைச் சோ்ந்த பணி ஓய்வுபெற்ற கல்வி அலுவலரும், கவிஞருமான சித. கருணாநிதிக்கு வீறுகவியரசா் முடியரசனாா் விருது வழங்கப்பட்டது.

முடியரசனாா் நூற்றாண்டு விழாவையொட்டி, வீறுகவியரசா் முடியரசன் அவைக்களம் அமைப்பின் சாா்பில் சிறந்த கவிஞா்களுக்கு விருது வழங்கும் விழா காராக்குடியில் அண்மையில் நடைபெற்றது.

விழாவில், கவிஞா்.பாரி முடியரசனாா், எழுத்தாளா் சுப.வீரபாண்டியன், அருட்தந்தை அமுதன் அடிகளாா், திமுக மாநில இலக்கிய அணி பொறுப்பாளா் கவிதைப் பித்தன் உள்ளிட்டோா் பங்கேற்று விருதுகளை வழங்கினா்.

இதில் மருதூா் கவிஞா் சித.கருணாநிதி, பாவேந்தா் பாரதிதாசனின் பெயா்த்தி கவிதாயினி, மணிமேகலை அம்மையாா் உள்ளிட்டோருக்கு விருதுகள் அளிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com