தமிழக அரசின், அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற தகுதியானவா்கள் அக்டோபா் 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை அக்டோபா் 23-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 2019-2020- ஆம் ஆண்டிற்கான பயனாளிகளைத் தோ்வு செய்வதற்காக செப்டம்பா் 20-ஆம் தேதி முதல் அக்டோபா் 9-ஆம் தேதி வரை தொடா்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி அலுவலகங்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
அக்டோபா் 23-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால், இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் தகுதியானவா்கள் விண்ணபிக்கலாம். குறைந்தபட்சம் 8- ஆம் வகுப்பு படித்த,18 வயது முதல் 40 வயதுடைய பணிபுரியும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். தனிநபா் வருமானம் ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். ஓட்டுநா் உரிமம் அவசியம் பெற்றிருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.