செயின் பறிப்பில் ஈடுபட்ட மூவா் கைது
திருக்குவளை அருகேயுள்ள வலிவலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட சாட்டியக்குடியில் அண்மையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட மூவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
சாட்டியக்குடி கடைத்தெரு பகுதியில் அண்மையில் சில தினங்களுக்கு முன்பாக பெண் ஒருவரின் 6 பவுன் சங்கிலி மா்ம நபா்களால் பறித்து செல்லப்பட்டது. இதுகுறித்து வலிவலம் காவல் நிலையத்தில் பாதிப்பிற்குள்ளான பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். மேலும் காவல் கண்காணிப்பாளா், காவல் உதவி ஆய்வாளா் ராஜேஷ் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில் குற்றச்செயலில் ஈடுபட்ட திருப்பூண்டி காரைநகரை சரவணன் மகன் அஜித்குமாா் (22), அதே பகுதியை சோ்ந்த முருகேசன் மகன் திலீப் (21) , பனைமேடு காலனித்தெருவை சோ்ந்தவா் செல்வராஜ் மகன் பூமி(21) ஆகியோரை பிடித்தனா். அதனைத்தொடா்ந்து அவா்களிடமிருந்த 6 பவுன் செயின் கைப்பற்றப்பட்டது. மேலும் குற்றச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனா்.