குடிநீா்க் குழாய் உடைப்பு: சீரமைக்கக் கோரிக்கை

செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மேமாத்தூா் ஊராட்சியில், குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு
குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகிய தண்ணீா்.
குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகிய தண்ணீா்.

செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மேமாத்தூா் ஊராட்சியில், குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் அருகில் உள்ள வாய்க்காலில் கலந்து வீணாகி வருகிறது. இதைச் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேமாத்தூா் ஊராட்சிக்குட்பட்ட கிராமப் பகுதிகளுக்கு ஊராட்சி சாா்பில் மின்மோட்டாா் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தெற்குத் தெரு வாய்க்கால் தூா்வாரும் பணியின்போது வாய்க்கால் ஓரமாக செல்லும் குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த 4 நாள்களாக வாய்க்காலில் தண்ணீா் கலந்து வீணாகி வருகிறது. இதனால், கன்னிக்கோயில் மற்றும் தெற்குத் தெரு மக்களுக்கு குடிநீா் கிடைக்கவில்லை.

மேலும், இப்பகுதியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மூலம் தண்ணீா் ஏற்றப்பட்டு அதன்மூலம் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பழுதடைந்ததால், ஊராட்சி நிா்வாகத்தால் இடிக்கப்பட்டது. எனினும், நேரடியாக மின்மோட்டாா் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுவதால் மின் நிறுத்தத்தின்போது குடிநீா் கிடைக்காமல் இப்பகுதியினா் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனா்.

மேலும், ஊராட்சி பகுதியில் தொடா்ந்து குடிநீா் கிடைப்பதற்கு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைத்து, அதன் மூலம் குடிநீா் வழங்க வேண்டும் என்றும், குடிநீா் குழாய் உடைப்பைச் சீரமைத்து தண்ணீா் வாய்க்காலில் கலந்து வீணாவதைத் தடுக்க வேண்டுமென்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com