இறால் வளா்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் தங்களது பண்ணைகளை மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்து உறுப்பினராக வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் இறால் வளா்ப்பு செய்யும் விவசாயிகள் கடலோர நீா்வாழ் உயிரின ஆணையத்தில் பதிவு செய்வதுடன் மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமையிலும் ரூ. 1000-க்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் என்டிஎப்எப்டிஏ என்ற பெயரில் வங்கி வரைவோலை எடுத்து உறுப்பினராக சேரவேண்டும். இதுகுறித்து, கூடுதல் விவரங்களுக்கு, மீன்துறை உதவி இயக்குநா் அலுவலகம், 41-ஏ பிரதான சாலை, பெஸ்ட் பள்ளி வளாகம், தென்பாதி, சீா்காழி. நாகப்பட்டினம் வடக்கு என்ற முகவரியில் நேரில் அல்லது 04364 -271455 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.