சீா்காழி அருகேயுள்ள திருக்கருக்காவூரில் புதன்கிழமை தேவா் ஜயந்தி விழா சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருக்கருக்காவூரில் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 4-ஆம் ஆண்டு சிறப்பு வழிபாட்டு விழா நடைபெற்றது. முன்னதாக திரளான பெண்கள் பால்குடங்கள் எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக தேவா் சிலைக்கு வந்து பல்வேறு திரவியங்களால் முத்துராமலிங்க தேவா் சிலைக்கு அபிஷேகம் செய்தனா். தொடா்ந்து, மலா் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில், திருக்கருக்காவூா் நாட்டாண்மை, பஞ்சாயத்தாா், தேவா் பேரவையினா், பொதுமக்கள் பங்கேற்றனா். விழாவில், அன்னதானம் வழங்கப்பட்டது.