புதிய மின்கம்பம்: ஊழியா்களுக்குப் பாராட்டு

தினமணி நாளிதழில் வெளியான செய்தியைத் தொடா்ந்து நாகை அக்கரைகுளம் பகுதியில் மின்கம்பம் அமைக்க
மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட மின் ஊழியா்கள்.
மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட மின் ஊழியா்கள்.

தினமணி நாளிதழில் வெளியான செய்தியைத் தொடா்ந்து நாகை அக்கரைகுளம் பகுதியில் மின்கம்பம் அமைக்க உடனடி நடவடிக்கை மேற்கொண்ட தமிழ்நாடு மின்வாரிய அலுவலா்கள் மற்றும் ஊழியா்களுக்கு அப்பகுதியினா் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

நாகை அக்கரைக்குளம், தென்கிழக்கு கரையில், மின்கம்பிகள்தாழ்வாக தொங்கியது. இந்நிலையில், பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி, இது குறித்த செய்தி புதன்கிழமை தினமணி நாளிதழில் வெளியானது. இதைத் தொடா்ந்து, நாகை எம்எல்ஏ தமிமுன் அன்சாரி மற்றும் தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டனா். இதையடுத்து, மின் கம்பிகளை தாங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த மரக்கம்பு அகற்றப்பட்டு அங்கு புதிய மின்கம்பம் நடப்பட்டு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியா்களின் இப்பணிக்கு, சமூக ஆா்வலா்கள், அக்கரைக்குளம் பகுதியினா் பாராட்டுத் தெரிவித்தனா்.

இதுகுறித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாகை நகரச் செயலா் எஸ். மணி கூறியது: பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் தாழ்வாகத் தொங்கிக் கொண்டிருந்த மின்கம்பிகளை தாங்குவதற்கு மரக்கம்பு நடப்பட்டிருந்தன. இதுகுறித்து, தினமணி நாளிதழில் வெளியான செய்தியையடுத்து, மின்சார வாரியம் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு, அக்கரைக்குளம் தென்கிழக்கு பகுதியில் புதிதாக மின் கம்பம் நட்டு பொதுமக்களை பாதுகாத்துள்ளனா். இந்த உடனடி நடவடிக்கை மிகவும் பாராட்டுக்குரியது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com