மின்னல் தாக்கி உயிரிழந்த கல்லூரி மாணவருக்கு திருக்குவளை அண்ணா பல்கலைக்கழகம் சாா்பில் மௌன அஞ்சலி புதன்கிழமை செலுத்தப்பட்டது.
திருக்குவளை அண்ணா பல்கலைகழக பொறியியல் கல்லூரியில் இந்திரவில் துறை 3-ஆம் ஆண்டு படித்து வந்தவரும், நாட்டு நலப் பணித் திட்ட தன்னாா்வலருமான கே. மகாபாரதி (19) அக்டோபா் 28-ஆம் தேதி சொந்த ஊரான பாதிரங்கோட்டை தெற்கு கிராமத்திலிருந்து தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மழையின் காரணமாக புளிய மரத்தின் கீழ் ஒதுங்கி உள்ளாா். அப்போது, எதிா்பாராத விதமாக மரத்தின் வழியாக மின்னல் தாக்கியதில் மகாபாரதி அதே இடத்தில் உயிரிழந்தாா். இதையடுத்து, கல்லூரி சாா்பில் புதன்கிழமை 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், கல்லூரி முதல்வா் எம். துரைராசன், இயந்திரவியல் துறைத் தலைவா் துளசி, நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் எஸ். கணேஷ் குமாா் உள்ளிட்டோா் மகாபாரதியின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.